×

வள்ளியூரில் பவுர்ணமி கிரிவலம்

வள்ளியூர், டிச. 25: பவுர்ணமியையொட்டிவள்ளியூர் புரம் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் சூட்டுப்பொத்தையில் கிரிவலம் நடந்தது.வள்ளியூர் பொதிகை மலைத்தொடர் சூட்டுப்பொத்தை மலையடிவாரத்தில் பவுர்ணமி தோறும் புரம் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் கிரிவலம்  நடந்து  வரு கிறது. இதே போல் மார்கழி பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சாமியார்பொத்தை உள்ள வன விநாயகர் சன்னதியில் பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து கிரிவலம் துவங்கியது. இதில் திரளாகப் பங்கேற்றோர், முத்துகிருஷ்ண சுவாமி குருமந்திரத்தை உச்சரித்தபடி சூட்டுப்பொத்தையை வலம்வந்தனர். சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கு பிறகு அன்னதானம் நடந்தது. மாலை புரம் மனீத்திவிய மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாதாஜி வித்தம்மா மற்றும் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Poornima Grivelam ,Valliyur ,
× RELATED வள்ளியூர் ரயில்வே தரைப்பாலத்தில் அரசு பேருந்து சிக்கியது